தூபம் போல் என் ஜெபங்கள்
ஏற்றுக் கொள்ளும் ஐயா
மாலை பலி போல் என் கைகளை
உயர்த்தினேன் ஐயா
உம்மை நோக்கி கதறுகிறேன்
விரைவாய் உதவி செய்யும்
என் குற்றங்கள் நீர் மனதில் கொண்டால்
நிலைநிற்க முடியாதையா
மன்னிப்புத் தருபவரே
உம்மைத் தான் தேடுகிறேன்
விடியலுக்காய் காத்திருக்கும்
காவலனைப் பார்க்கிலும்
என் நெஞ்சம் ஆவலுடன்
உமக்காய் ஏங்குதையா
என் வாய்க்கு காவல் வையும்
காத்துக் கொள்ளுமையா
தீயன எதையுமே
நாட விடாதேயும்
என் கண்கள் உம்மைத் தானே
நோக்கி இருக்கின்றன
அடைக்கலம் புகுந்தேன் - நான்
அழிய விடாதேயும்
NONE
Song Description: Tamil Christian Song Lyrics, Thoobam Pol - தூபம் போல்.
KeyWords: Christian Song Lyrics, Father Berchmans songs, Thoobam Pol En songs lyrics.