Naalaiya Thinathai - நாளைய தினத்தை




 

நாளைய தினத்தைக்
குறித்து பயமில்லை
நாதன் இயேசு
எல்லாம் பார்த்துக் கொள்வார்

ஆண்டவர் எனது
வெளிச்சமும் மீட்புமானார்
எதற்கும் பயப்படேன்
அவரே எனது வாழ்வின் பெலனானார்
யாருக்கும் அஞ்சிடேன் அல்லேலூயா

கேடு வரும் நாளில் கூடார மறைவினிலே
ஒளித்து வைத்திடுவார்
கன்மலையின் மேல் உயர்த்தி நிறுத்திடுவார்
கலக்கம் எனக்கில்லை அல்லேலூயா

தகப்பனும் தாயும்
என்னை கைவிட்டாலும்
கர்த்தர் சேர்த்துக் கொள்வார்
கர்த்தருக்காய்
நான் தினமும் காத்திருப்பேன்
புதுபெலன் பெற்றிடுவேன் அல்லேலுயா

NONE




Song Description: Tamil Christian Song Lyrics, Naalaiya Thinathai - நாளைய தினத்தை.
KeyWords: Christian Song Lyrics, Father Berchmans songs, Naalaya Dinathai songs lyrics.